YouVersion Logo
Search Icon

நீதி 25

25
அத்தியாயம் 25
மேலும் சாலொமோனின் நீதிமொழிகள்
1யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள்
பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை;
காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
3வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும்,
ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
4வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு,
அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும்.
5ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு,
அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
6ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே;
பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே.
7உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல;
அவன் உன்னைப் பார்த்து:
மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.
8வழக்காடப் வேகமாகமாகப் போகாதே;
முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது,
நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
9நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு,
மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
10மற்றப்படி அதைக் கேட்கிறவன்
உன்னை நிந்திப்பான்;
உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது.
11ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை
வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம்.
12கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன்,
பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம்.
13அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ,
அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்;
அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.
14கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன்
மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம்.
15நீண்ட பொறுமையினால்
பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்;
இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
16தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு;
அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.
17உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி,
அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே.
18பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன்
தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன்.
19ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது
உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம்.
20மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன்,
குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும்,
வெடியுப்பின்#25:20 காயத்தின் மேல் உப்பு. காரத்தை/ வலியை அதிகமாக்கும்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான்.
21உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால்,
அவனுக்கு சாப்பிட உணவு கொடு;
அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.
22அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்;#25:22 நீ அவனுடைய தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்
யெகோவா உனக்குப் பலனளிப்பார்.
23வடகாற்று மழையையும்,
புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
24சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட,
வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
25தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி
தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம்.
26துன்மார்க்கர்களுக்கு முன்பாக
நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும்.
27தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல,
தற்புகழை நாடுவதும் புகழல்ல.
28தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன்
மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.

Currently Selected:

நீதி 25: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in