YouVersion Logo
Search Icon

சங் 39

39
சங்கீதம் 39
எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்.
1என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய
வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.
2நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன்,
நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்;
ஆனாலும் என்னுடைய துக்கம் அதிகரித்தது;
3என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது;
நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது;
அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன்.
4யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும்,
என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
5இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்;
என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது;
எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)
6நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்;
வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான்.
யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான்.
7இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை.
8என்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும்,
மூடனின் அவமானப்படுத்துதலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க வேண்டாம்.
9நீரே இதைச் செய்தீர் என்று நான்
என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன்.
10என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்;
உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.
11அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது,
அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்;
நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா)
12யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு,
என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்;
என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்;
என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல
நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன்.
13நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே,
தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.

Currently Selected:

சங் 39: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in