YouVersion Logo
Search Icon

சங் 85

85
சங்கீதம் 85
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல்.
1யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து,
யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
2உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து,
அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)
3உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு,
உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
4எங்கள் இரட்சிப்பின் தேவனே,
நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,
எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.
5என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ?
தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?
6உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி
நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
7யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து,
உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
8கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்;
அவர் தம்முடைய மக்களுக்கும்
தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்;
அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக.
9நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி,
அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
10கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்,
நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
11சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும்,
நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.
12யெகோவா நன்மையானதைத் தருவார்;
நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும்.
13நீதி அவருக்கு முன்னாகச் சென்று,
அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.

Currently Selected:

சங் 85: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in