YouVersion Logo
Search Icon

சங் 92

92
சங்கீதம் 92
ஓய்வுநாளின் பாடல்.
1யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே,
உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும்,
2பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும்,
தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
3காலையிலே உமது கிருபையையும்,
இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும்.
4யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர்,
உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன்.
5யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்!
உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
6மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்;
மூடன் அதை உணரமாட்டான்.
7துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து,
அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது,
அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
8யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர்.
9யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்;
உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள்.
10என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்;
புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன்.
11என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்;
எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு
நேரிடுவதை என்னுடைய காது கேட்கும்.
12நீதிமான் பனையைப்போல் செழித்து,
லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
13யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள்
எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள்.
14யெகோவா உத்தமரென்றும்,
என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில்
அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி,
15அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து,
புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள்.

Currently Selected:

சங் 92: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங் 92