YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலர் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் பவுலுடன் ஊழியத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர் லூக்காவினால் எழுதப்பட்டது. கி.பி. 65 ஆம் ஆண்டிலிருந்து 70 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் இதை எழுதினார். லூக்கா தன்னுடைய நற்செய்திப் புத்தகத்தின் தொடர்ச்சியாகவே அப்போஸ்தலர் நடபடிகள் என்ற புத்தகத்தை எழுதினார்.
இந்த புத்தகத்தில் ஏறக்குறைய கி.பி. 65 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற சம்பவங்கள் அடங்கியுள்ளன. இயேசு தாம் பூமியில் செய்யத் தொடங்கியதை தமது திருச்சபையின் மூலமாகத் தொடர்ந்து செய்கிறார் என்பதை அவர் எடுத்துக் காட்டுகிறார். யூதர்கள் வாழ்ந்த பகுதியில் இருந்து யூதரல்லாதவர்கள் வாழ்ந்த பகுதிக்கு நற்செய்தி எவ்வாறு பரவியது என்பதைக் காட்டுவதற்காகவே இப்புத்தகம் எழுதப்பட்டது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in