YouVersion Logo
Search Icon

ஆபகூக் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டின் முடிவில் எழுதப்பட்டது. யூதா அரசு கி.மு. 586 இல் வீழ்ச்சியடைவதற்கு முன்னுள்ள இறுதி நாட்களிலேயே ஆபகூக் இறைவாக்குரைத்தார். யூதா அரசின்மேல் வரப்போகும் அழிவை அவர் கண்டு, மனத்துன்பம் அடைகின்றார். யூதா மக்களுக்கு தீமை வரும்படி இறைவன் ஏன் அனுமதித்தார் என்பதும் யூதாவைத் தண்டிப்பதற்கு பாவம் நிறைந்த நாடான பாபிலோனை இறைவன் எப்படி பயன்படுத்தலாம் என்பதுமே அவரது இரண்டு கேள்விகளாகும். ஆயினும் இறைவனின் தரிசனத்தைக் கண்டதினால் அவர் துன்ப நாட்களுக்குள் துணிச்சலுடன் வாழ்ந்தார். இறைவனே ஆளுகை செய்கிறவர். நாம் அவரில் நம்பிக்கையாய் இருக்கவேண்டும் என்பதே இப்புத்தகத்தின் முக்கிய போதனை ஆகும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in