YouVersion Logo
Search Icon

பிலிப்பியர் முன்னுரை

முன்னுரை
இந்தக் கடிதம் கி.பி. 60 ஆம் ஆண்டிலிருந்து 61 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பிலிப்பி பட்டணத்திலுள்ள திருச்சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. ரோம் பட்டணத்திலுள்ள சிறையிலிருந்தே அவர் இதை எழுதினார். பிலிப்பி பட்டணத்திலுள்ள சில நெருங்கிய நண்பர்கள் அவருடைய தேவைகளைச் சந்திக்கும்படியாக அவருக்குப் பணம் அனுப்பியிருந்தார்கள். தான் பெற்றுக்கொண்டதையும், ரோம் பட்டணத்தில் தாம் எதிர்கொண்ட சில பிரச்சனைகளைக் குறித்தும் அவர்களுக்குத் தெரிவிக்கும்படியாகவே அவர் இதை எழுதுகிறார். விசுவாசிகள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமென்று கூறுகிறார். ஆவிக்குரிய வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்போது கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாம் இறைவனுக்குப் பணிந்திருக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in