YouVersion Logo
Search Icon

நீதிமொழி முன்னுரை

முன்னுரை
இந்தப் புத்தகம் கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதில் பெரும்பகுதியை எழுதியவர் சாலொமோன் அரசன். இவரைத்தவிர வேறு சிலரும் இதன் மற்ற பகுதிகளை எழுதியிருக்கிறார்கள். இப்புத்தகத்தில் வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கேற்ற, இறைவனால் கொடுக்கப்பட்ட பல நடைமுறை அறிவுரைகள் அடங்கியுள்ளன. இது இறைவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு இறைஞானம் உண்டென்றும், அத்துடன் இறைவனின் அருளால் மனிதன் பெற்றிருக்கின்ற பகுத்தறிவு ஒன்று உண்டென்றும், இவை இரண்டுமே நமது அன்றாட வாழ்க்கையில் பங்கேற்க வேண்டும் என்றும் நமக்குப் போதிக்கிறது. இறைவனில் நம்பிக்கையாயிருப்பதும், அவருக்குப் பயந்து நடப்பதுமே ஞானத்தின் முதல்படி என்று இது கூறுகிறது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in