YouVersion Logo
Search Icon

சங்கீதம் 14

14
சங்கீதம் 14
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1“இறைவன் இல்லை” என்று
மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான்.
அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை;
நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
2யெகோவா பரலோகத்திலிருந்து
மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார்,
அவர்களில் விவேகமுள்ளவனாவது
இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.
3எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்;
நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை,
ஒருவனாகிலும் இல்லை.
4தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ?
மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்;
அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை.
5அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்;
ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார்.
6தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்;
ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம்.
7சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக!
யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது
யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in