எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 9:13-14
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 9:13-14 TAERV
கர்த்தர் இந்த வினாக்களுக்கு விடை சொன்னார். அவர் கூறினார்: “இது ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள். நான் எனது போதனைகளைக் கொடுத்தேன். ஆனால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டனர். யூதாவின் ஜனங்கள் தங்கள் சொந்த வழியிலேயே வாழ்ந்தார்கள். அவர்கள் பிடிவாதக்காரர்கள், அவர்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொள்கிறார்கள். அவர்களின் தந்தைகள் அந்தப் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள சொல்லித் தந்தனர்.”