YouVersion Logo
Search Icon

1 தெசலோனிக்கேயர் முன்னுரை

முன்னுரை
இந்தக் கடிதம் கி.பி. 50 ஆம் ஆண்டிலிருந்து 51 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் தெசலோனிக்கேயாவிலுள்ள திருச்சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. அவர் கொரிந்துவிலிருந்து இந்தக் கடிதத்தை எழுதினார். பவுல் தமது இரண்டாவது நற்செய்திப் பணியின் பயணத்தின்போது, தெசலோனிக்கேயா பட்டணத்திற்குச் சென்றிருந்தார். ஆனால் அங்கு ஏற்பட்ட துன்புறுத்தலின் நிமித்தம் அவர் அங்கிருந்து வெளியேற நேர்ந்தது. தெசலோனிக்கேயா பட்டணத்திலுள்ள விசுவாசிகள் தங்களது துன்பங்களின் மத்தியிலும், விசுவாசத்தில் உறுதியாய் நிற்கிறார்கள் என்பதை தீமோத்தேயுவின் மூலமாகப் பவுல் அறிந்துகொண்டார். கர்த்தருக்குள்ளான அந்த இளம் விசுவாசிகளை ஆறுதல்படுத்துவதற்காகவும், உற்சாகப்படுத்துவதற்காகவுமே பவுல் இக்கடிதத்தை எழுதினார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in