YouVersion Logo
Search Icon

ஆமோஸ் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆமோஸ் யூதாவின் தென்திசை அரசிலிருந்த தெக்கோவா நாட்டைச் சேர்ந்தவன். இறைவன் அவனை வட அரசான இஸ்ரயேலுக்கு இறைவாக்கு உரைக்க அனுப்பினார். ஆமோஸ் இஸ்ரயேலின் அயல் நாட்டவர்மேல் இறைவனின் நியாயத்தீர்ப்பை அறிவித்துவிட்டு, இறுதியாக இஸ்ரயேலின்மேல் இறைவாக்கு உரைக்கிறார். இஸ்ரயேலின் பாவங்களை அவர் கடுமையாகக் கண்டிக்கிறார். குறிப்பாக, அவர்களிடையே காணப்பட்ட அநீதி, நிர்வாகச் சீர்கேடு, பேராசை, பொய்யான வழிபாடு ஆகிய பாவங்களைக் கண்டிக்கிறார். இப்புத்தகம் இறைவனின் நீதியை வலியுறுத்துகிறது. இறைவன் நீதியானவராய் இருப்பதனால், தம்முடைய மக்களும் நீதியானவர்களாய் இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். இதுவே இதன் பிரதான செய்தியாகும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in