YouVersion Logo
Search Icon

சங்கீதம் 111

111
சங்கீதம் 111
1அல்லேலூயா,
நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும்
நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன்.
2யெகோவாவின் செயல்கள் மகத்தானவை;
அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன.
3அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை;
அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.
4அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்;
யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார்.
5அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்;
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார்.
6அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து,
தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார்.
7அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை;
அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை.
8அவை என்றென்றும் உறுதியானவை;
உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை.
9அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்;
அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்;
பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது.
10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு.
நித்தியமான துதி அவருக்கே உரியது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீதம் 111