YouVersion Logo
Search Icon

சங்கீதம் 12

12
சங்கீதம் 12
செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை;
மனிதருள் உண்மையுள்ளவர்கள் குறைந்துவிட்டார்கள்.
2ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்;
அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி
இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள்.
3முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும்
பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக.
4“எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்;
எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?”
என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
5“ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதினால் நான் இப்பொழுது எழுந்து,
அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.
6யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை.
அவை களிமண் உலையில்
ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன.
7யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்;
கொடியவர்களிடமிருந்து எங்களை என்றென்றும் காத்துக்கொள்வீர்.
8இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால்
கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in