YouVersion Logo
Search Icon

சங்கீதம் 121

121
சங்கீதம் 121
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
1மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன்.
எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
2வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே,
எனக்கு உதவி வரும்.
3அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்;
உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார்.
4இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர்,
உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
5யெகோவா உன்னைக் காக்கிறவர்;
யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
6பகலில் சூரியனோ,
இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.
7யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்;
அவர் உன் வாழ்வைக் காப்பார்.
8யெகோவா உன் போக்கையும் வரத்தையும்
இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in