YouVersion Logo
Search Icon

சங்கீதம் 122

122
சங்கீதம் 122
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
1“யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்”
என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.
2எருசலேமே, எங்கள் கால்கள்
உன் வாசல்களில் நிற்கின்றன.
3நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல்,
எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது.
4யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு,
கோத்திரங்கள் அங்கு போவார்கள்;
இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி,
யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள்.
5தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன;
அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள்.
6எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்:
“உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்.
7உன் மதில்களுக்குள் சமாதானமும்,
உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.”
8என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும்
“உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன்.
9எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால்,
நான் உன் செழிப்பைத் தேடுவேன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in