YouVersion Logo
Search Icon

சங்கீதம் 123

123
சங்கீதம் 123
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
1பரலோகத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே,
நான் உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தி மன்றாடுகிறேன்.
2அடிமைகளின் கண்கள் தங்கள் எஜமானுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும்,
அடிமைப்பெண்ணின் கண்கள் தன் எஜமாட்டியினுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும்,
எங்கள் கண்களும் எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கம் காண்பிக்கும்வரை,
அவரையே நோக்கிப்பார்க்கின்றன.
3எங்கள்மேல் இரக்கமாயிரும், யெகோவாவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்;
அதிகமான அவமதிப்பை நாங்கள் சகித்துக்கொண்டோம்.
4பெருமைக்காரரின் ஏளனத்தையும்,
அகங்காரம் கொண்டவர்களின் அதிகமான அவமதிப்பையும்
நாங்கள் சகித்துக்கொண்டோம்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in