YouVersion Logo
Search Icon

சங்கீதம் 124

124
சங்கீதம் 124
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
1யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்:
2மனிதர் நம்மை தாக்கும்போது
யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
3அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது,
அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;
4வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே,
நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே,
5பொங்கி வந்த வெள்ளம்
நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.
6அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத
யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.
7வேடனுடைய கண்ணியிலிருந்து
தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்;
கண்ணி அறுந்தது,
நாம் தப்பினோம்.
8வானத்தையும் பூமியையும் படைத்தவரான
யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in