YouVersion Logo
Search Icon

சங்கீதம் 150

150
சங்கீதம் 150
1அல்லேலூயா,
இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்;
அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.
2அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;
இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
3எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;
யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.
4தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்;
கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.
5கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்;
அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.
6சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.
அல்லேலூயா.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீதம் 150