YouVersion Logo
Search Icon

சங்கீதம் 75

75
சங்கீதம் 75
“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.
1இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்;
உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்;
மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள்.
2இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு,
நீதியாய் நியாயந்தீர்பேன்.
3பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது;
நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன்.
4அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும்,
கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார்.
5உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்;
தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார். ”
6கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ,
அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது.
7ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே:
அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார்.
8யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும்
காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது;
அவர் அதை ஊற்றுகிறார்;
பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள்.
9நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்;
நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
10“கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்;
ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்”
என்று இறைவன் சொல்கிறார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீதம் 75