மத்தேயு 2:12-13
மத்தேயு 2:12-13 TRV
ஏரோதிடம் மீண்டும் செல்லக்கூடாது என அவர்கள் ஒரு கனவிலே எச்சரிக்கப்பட்டிருந்தபடியால், அதன் பின்னர் வேறு வழியாக அவர்கள் தங்கள் நாட்டைச் சென்றடைந்தார்கள். அவர்கள் திரும்பிச் சென்ற பின்பு, இதோ! கர்த்தரின் தூதன் ஒருவன் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “எழுந்திரு! பிள்ளையையும் தாயையும் அழைத்துக்கொண்டு, எகிப்துக்கு தப்பிப் போ. நான் உனக்குச் சொல்லும்வரை அங்கேயே தங்கியிரு. ஏனெனில் ஏரோது பிள்ளையைக் கொல்வதற்காக அவரைத் தேடப்போகின்றான்” என்றான்.