இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஏசாயா 53:5

ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்
5 நாட்கள்
இந்த 5 நாள் திட்டத்தின் வழியாக ஈஸ்டரின் உண்மையான அர்த்தத்தை அறிவோம். நாம் வாழ்வதற்காக இயேசு பெரும் துயரங்களையும் மரணத்தையும் கூட சகித்தார். இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றிருக்கும் மரணத்தின் மீதான இந்த வெற்றியை அனுபவிக்க நீங்கள் தயாரா? உங்கள் வாழ்க்கை மறுரூபமாகும்!

உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்
7 நாட்கள்
இந்தத் தலைப்பில் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இயேசு இந்த பூமியில் இருந்தபோது அவர் செய்த அருட்பணியின் பெரும்பகுதியானது சுகமாக்குதலாகத் தான் இருந்தது. இந்த வேதாகமப் பாடத்திட்டத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆழமான முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்படி சுகத்தை மாபெரும் பரம வைத்தியர் மட்டுமே கொடுக்க முடியும்

இயேசு கேட்ட 7 கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்
7 நாட்களில்
இயேசு கிறிஸ்து தமது சிந்தனையைத் தூண்டும் கேள்விகளுக்காக அறியப்பட்டவர். பெரும்பாலும் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் ஒரு பதில் கேள்வியையே பதிலாக அளிப்பார். இந்தத் திட்டத்தில், நமது சொந்த வாழ்க்கையை ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்காக இயேசு கேட்ட ஏழு கேள்விகளை நாம் ஆராய்வோம்.

இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்
10 நாட்கள்
இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?

நற்செய்தி: தேவனுடைய இரட்சிப்பின் திட்டம்
10 நாட்களில்
வருகின்ற 10 நாள் திட்டத்தில், தேவன் இந்த உலகத்தை எவ்வளவு மகிமையாய்ப் படைத்தார் என்பதையும், பாவத்தின் பிரவேசத்தினால் மனுக்குலம் அடைந்த அந்தகார நிலையையும் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். நாம் பாவிகளாயிருக்கையில் தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால், தமது தயையுள்ள சித்தத்தின்படி நமக்காக ஒரு மீட்பின் திட்டத்தை நியமித்தார். அந்தத் திட்டத்தை அவர் இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றி, நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு, இன்றும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம்மைப் பரிசுத்தமாக்கித் தமது கிருபையினால் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்தத் தியானத்தின் ஊடாக, கிறிஸ்துவுக்குள் நமக்குக் கிடைத்துள்ள புதிய அடையாளத்தையும், அவர் நமக்குக் கொடுத்துள்ள உன்னதமான பணியையும், நித்திய நம்பிக்கையையும் விரிவாகத் தியானிக்கப்போகிறோம்.

மரணத்திலிருந்து ஜீவனுக்கு
12 நாட்களில்
கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டங்களை மிகவும் நேசிக்கும் நாம், கிறிஸ்துவின் உயிர்ப்பையும் அதே உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். பெத்லகேமில் தொடங்கிய அவரின் பயணம், கொல்கொதாவில் நிறைவுற்றதாகத் தோன்றுகிறது. உண்மையில் அது அத்துடன் நிறைவடையவில்லை! கடைசி இராப்போஜனம், இயேசுவின் மரணம், இடைப்பட்ட ஓய்வுநாள் மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் ஆகிய சம்பவங்களின் முக்கியத்துவத்தை தியானிக்க உதவும் 12-நாள் உயிர்ப்பு ஞாயிறு திட்டம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

இயேசு ஏன் உங்களுக்காக இரத்தம் சிந்தினார்?
14 நாட்களில்
இந்த பதினான்கு நாள் வாசிப்புத் திட்டத்தில், இயேசு தனது கடைசி மணிநேரங்களில் இரத்தம் சிந்திய ஏழு தருணங்களையும், அவை ஒவ்வொன்றின் முக்கியத்துவத்தையும் நாம் விரிவாகப் பார்ப்போம்.

குணமாக்கும் கிறிஸ்து
25 நாட்களில்
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.

வருகை: கிறிஸ்துமஸ் பயணம்
25 நாட்கள்
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.