இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 6:9

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்
5 நாட்களில்
அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....

இயேசுவின் ஜெபங்கள்
5 நாட்கள்
நம் உறவுகளில் தொடர்பு எனபது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம், கர்த்தருடனான தொடர்பும் அதற்கு விதிவிலக்கல்ல. நாம் கர்த்தருடன் ஜெபத்தின் மூலம் தொடர்பு கொள்ளவேண்டுமென்று ஆசிக்கிறார் - அவரது குமாரனான இயேசு கூட அதே ஒழுங்குமுறையைத் தான் கடைப்பிடித்தார். இந்தத் திட்டத்தில் இயேசுவின் முன்மாதிரியிலிருந்து கற்றுக் கொண்டு உலக வாழ்வின் போக்கிலிருந்து விடுபட்டு ஜெபம் தரும் வல்லமை மற்றும் வழிநடத்தலை நீங்களே அனுபவிக்கலாம்.

உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!
6 நாட்கள்
வல்லமையான, பதில்பெறும் ஜெப வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நமது வாழ்விலும், சூழலிலும் சாதகமான மாறுதலுக்கான வழியைத் திறக்கும் சாவியே ஜெபம் – தனிநபராகத் தேவனோடு கொண்டுள்ள உறவு. இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

ராஜ்ஜியம் வருவதாக
15 நாட்கள்
இயேசு "முழுமையான வாழ்க்கையை" வழங்குகிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், அந்த அனுபவத்தை நாங்கள் விரும்புகிறோம். மாற்றத்தின் மறுபக்கத்தில் இருக்கும் அந்த வாழ்க்கையை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நமக்கு என்ன மாதிரியான மாற்றம் தேவை? மற்றும் நாம் மாற்றும் செயல்முறை பற்றி எப்படி செல்ல வேண்டும்? கிங்டம் கம்வில், தேவன் நம்மை அழைக்கும் தலைகீழான மற்றும் உள்-வெளி வாழ்க்கையை வாழ்வதற்கான புதிய வழியை நீங்கள் ஆராய்வீர்கள்.

ஜெபம்
3 வாரங்கள்
எப்படி ஜெபிப்பது என்று பக்தர்களின் ஜெபங்களிலிருந்தும் இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கைகளை தேவனிடம் தினமும், தொடர்ந்து பொறுமையாக எடுத்து செல்வதில் உற்சாகம் கண்டடையுங்கள். காலியான சுய நீதி நிறைந்த ஜெபங்களுக்கும், சுத்த இருதயத்திலிருந்து வரும் தூய்மையான ஜெபங்களுக்கும் மாதிரிகளை காணுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள்.

இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்
28 நாட்கள்
நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.