அவர்கள் ஆடிப்பாடுகையில் சொன்னதாவது:
“சவுல் ஆயிரக் கணக்கில் கொன்றான்.
தாவீது பத்தாயிரக் கணக்கில் கொன்றான்.”
அதைக்கேட்ட சவுல் அதிக கோபமடைந்தான். அந்தப் பாட்டு அவனுக்கு கசப்பாயிருந்தது. “தாவீதுக்கு பத்தாயிரமும், எனக்கு ஆயிரமும் என்று சொல்லியல்லவா மதிப்புக் கொடுக்கிறார்கள். மேலும் அவனுக்கு அரசாட்சியைவிட வேறு எதை அதிகமாய் கொடுப்பார்கள்” என்று நினைத்தான்.