“நான் தெரிந்துகொண்ட உபவாசம் என்பது:
அநீதியின் சங்கிலிகளைத் தளர்த்துவதும்,
நுகத்தின் கயிறுகளை அவிழ்ப்பதும்,
ஒடுக்கப்பட்டோரை விடுதலையாக்குவதும்,
ஒவ்வொரு நுகத்தையும் உடைத்துப் போடுவதும் அல்லவோ?
பசியுற்றோருடன் உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்வதும்,
வீடற்ற ஏழைகளுக்கு இருப்பிடம் கொடுப்பதும்,
உடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு உடை கொடுப்பதும்,
உன் சொந்த உறவினர்களிடமிருந்து
உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதிருப்பதும் அல்லவோ?