யெகோவா சொல்வது இதுவே:
“மனிதரில் தன் நம்பிக்கையை வைத்து,
தன் பெலனுக்காக மாம்சத்தைச் சார்ந்து,
யெகோவாவைவிட்டு தனது இருதயத்தை விலக்கிக்கொள்கிறவன் சபிக்கப்பட்டவன்.
அவன் பாழ்நிலத்திலுள்ள புதரைப்போல இருப்பான்.
அவன் செழிப்பு வரும்போது, அதைக் காணமாட்டான்.
அவன் யாரும் வசிக்க முடியாத உவர் நிலத்திலும்,
பாலைவனத்திலுள்ள வறண்ட இடங்களிலும் தங்கியிருப்பான்.