நீ இறைவனை நோக்கிப்பார்த்து,
எல்லாம் வல்லவரிடம் மன்றாடுவாயானால்,
நீ தூய்மையும் நேர்மையும் உள்ளவனாயிருந்தால்,
இப்பொழுதும் அவர் உன் சார்பாக எழுந்து,
உன்னை உனக்குரிய இடத்தில் திரும்பவும் வைப்பார்.
உன் ஆரம்பம் அற்பமானதாயிருந்தாலும்,
உன் எதிர்காலம் மிகவும் செழிப்பானதாக இருக்கும்.