இப்போது நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குப் பயப்படுகிறீர்கள். ஆனால் பாபிலோன் ராஜாவுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்’ இதுதான் கர்த்தருடைய வார்த்தை, ‘ஏனென்றால் நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களைக் காப்பாற்றுவேன். நான் உங்களை விடுவிப்பேன். நான் உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவிப்பேன். நான் உங்களிடம் தயவாய் இருப்பேன். பாபிலோனின் ராஜாவும் உங்களை இரக்கத்தோடு நடத்துவான். அவன் உங்களை திரும்பவும் உங்கள் நாட்டுக்குக் கொண்டு வருவான்.’