1
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:26
பரிசுத்த பைபிள்
இயேசு தம் சீஷர்களைப் பார்த்து, “மனிதர்களால் ஆகக் கூடியதல்ல இது. ஆனால், எல்லாம் வல்ல தேவனால் ஆகும்” என்று சொன்னார்.
ஒப்பீடு
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:26 ஆராயுங்கள்
2
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:6
எனவே, கணவனும் மனைவியும் இருவரல்ல ஒருவரே. அவர்களை இணைத்தவர் தேவன். எனவே, எவரும் அவர்கள் இருவரையும் பிரிக்கக் கூடாது” என்று பதில் கூறினார்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:6 ஆராயுங்கள்
3
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:4-5
அவர்களுக்கு இயேசு, “தேவன் உலகைப் படைத்தபொழுது மனிதர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் நிச்சயமாய் படித்திருப்பீர்கள். தேவன் சொன்னார், ‘ஒருவன் தன் தாய் தந்தையரை விட்டு விலகி தன் மனைவியுடன் இணைவான், கணவனும் மனைவியும் ஒன்றாவார்கள்.’
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:4-5 ஆராயுங்கள்
4
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:14
ஆனால் இயேசு, “குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம், ஏனென்றால் பரலோக இராஜ்யம் இக்குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே உரியது” என்று கூறினார்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:14 ஆராயுங்கள்
5
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:30
உயர்ந்த வாழ்க்கை வாழும் பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த வாழ்வை அடைவார்கள். மிகத் தாழ்ந்த வாழ்வை வாழும் பலர் மிக உயர்ந்த வாழ்வை அடைவார்கள்” என்றார்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:30 ஆராயுங்கள்
6
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:29
மேலும் என்னைப் பின்பற்றுவதற்காக வீடு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் அல்லது நிலம் ஆகியவற்றைத் துறந்தவன், தான் துறந்ததை விடப் பல மடங்கு பலன் பெறுவான். அவன் நித்திய ஜீவனைப் பெறுவான்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:29 ஆராயுங்கள்
7
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:21
இயேசு அவனிடம், “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:21 ஆராயுங்கள்
8
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:17
இயேசு அவனிடம், “எது நல்லது என்பதை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். நீ நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட” என்று பதிலுரைத்தார்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:17 ஆராயுங்கள்
9
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:24
ஆம் பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது” என்று கூறினார்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:24 ஆராயுங்கள்
10
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:9
நான் கூறுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்து பின் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபச்சாரம் என்னும் குற்றத்திற்கு ஆளாகிறான். ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய ஒரே தகுதியான காரணம் அவள் வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருப்பதே ஆகும்” என்றார்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:9 ஆராயுங்கள்
11
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:23
பிறகு, இயேசு தம் சீஷர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். பரலோக இராஜ்யத்திற்குள் செல்வந்தர்கள் நுழைவது மிகக் கடினம்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 19:23 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்