1
சங்கீத புத்தகம் 139:14
பரிசுத்த பைபிள்
கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்! நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர். நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 139:14 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 139:23-24
கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும். என்னைச் சோதித்து என் நினைவுகளை அறிந்துகொள்ளும். என்னிடம் கொடிய எண்ணங்கள் உள்ளனவா எனப்பாரும். நித்தியத்திற்குரிய பாதையில் என்னை வழிநடத்தும்.
சங்கீத புத்தகம் 139:23-24 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 139:13
கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர். என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.
சங்கீத புத்தகம் 139:13 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 139:16
என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர். உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர். நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.
சங்கீத புத்தகம் 139:16 ஆராயுங்கள்
5
சங்கீத புத்தகம் 139:1
கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர். என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
சங்கீத புத்தகம் 139:1 ஆராயுங்கள்
6
சங்கீத புத்தகம் 139:7
நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது. கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.
சங்கீத புத்தகம் 139:7 ஆராயுங்கள்
7
சங்கீத புத்தகம் 139:2
நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர். வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.
சங்கீத புத்தகம் 139:2 ஆராயுங்கள்
8
சங்கீத புத்தகம் 139:4
கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள் என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.
சங்கீத புத்தகம் 139:4 ஆராயுங்கள்
9
சங்கீத புத்தகம் 139:3
கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர். நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.
சங்கீத புத்தகம் 139:3 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்