சங் 112
112
சங்கீதம் 112
1அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து,
அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான்.
2அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும்,
செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
3செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்;
அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்;
அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்.
5இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.
6அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்;
நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன்.
7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்;
அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும்.
8அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்;
அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான்.
9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்;
அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும்.
10துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி,
தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்;
துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சங் 112: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.