சங் 114

114
சங்கீதம் 114
1இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
2யூதா அவருக்குப் பரிசுத்த இடமும்,
இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.
3கடல் கண்டு விலகி ஓடினது;
யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
4மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்,
குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்;
யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;
6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே,
நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும்,
உங்களுக்கு என்ன வந்தது?
7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும்,
யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
8அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும்,
கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங் 114: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்