1 யோவான் முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கி.பி. 85 ஆம் ஆண்டிலிருந்து 96 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் அப்போஸ்தலன் யோவானால் எழுதப்பட்டது. யோவான் மிகவும் வயதுசென்றவராயிருந்த காலத்தில், அவருடைய அன்புக்குரியவர்களாயிருந்த விசுவாசிகளுக்கு அவரால் தனிப்பட்ட விதத்தில் எழுதப்பட்டது. அவர் எபேசு பட்டணத்திலிருந்து இதை எழுதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இயேசுவை அறிந்தவர்கள் பிதாவையும் அறிந்திருக்கிறார்கள் என்றும், இறைவன் அன்பாயிருக்கிறார் என்பதையும் இவர் முக்கியமாய் குறிப்பிடுகிறார். அன்பு, மன்னிப்பு, ஐக்கியம், பாவத்தை மேற்கொள்ளுதல், இரட்சிப்பின் நிச்சயம், தூய்மை, நித்தியவாழ்வு ஆகியவற்றை முக்கியமானவைகளாக எடுத்துக் காண்பித்திருக்கிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 யோவான் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்