சங்கீதம் 100

100
சங்கீதம் 100
நன்றியுணர்வை வெளிப்படுத்தும் சங்கீதம்.
1பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள்.
2மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள்,
மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள்.
3யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள்.
அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்;
நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள்.
4அவருடைய வாசல்களில் நன்றியோடும்,
அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள்
அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
5யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது;
அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 100: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்