ஓசியா 10:1-2

ஓசியா 10:1-2 TAERV

இஸ்ரவேல் ஏராளமாகக் கனிகளைக் கொடுக்கிற திராட்சைக்கொடியைப் போன்றவன். ஆனால் இஸ்ரவேல் மேலும், மேலும் மிகுதியாகப் பொருட்களைப் பெற்றதும் அந்நிய தெய்வங்களைக் கௌரவிக்க மென்மேலும் பலிபீடங்களைக் கட்டினான். அவனுடைய நாடு மேலும், மேலும் வளம் பெற்றது. ஆகவே அவன் மேலும், மேலும் அந்நிய தெய்வத்தை கௌரவிக்கக் கற்களை அமைத்தான். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஏமாற்ற முயன்றார்கள். ஆனால் இப்போது அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். கர்த்தர் அவர்கள் பலிபீடங்களை உடைப்பார். அவர் அவர்கள் நினைவு கற்களை அழிப்பார்.