எசேக்கியேல் 37:5

எசேக்கியேல் 37:5 TAOVBSI

கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எசேக்கியேல் 37:5

பள்ளத்தாக்கிலிருந்து தேவனின்  வெற்றிக்குள் கடந்து வருவோம் எசேக்கியேல் 37:5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

பள்ளத்தாக்கிலிருந்து தேவனின் வெற்றிக்குள் கடந்து வருவோம்

5 நாட்களில்

ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்துவைக்கும்போது, அதாவது கடந்த கால பள்ளத்தாக்கை பின்னால் விட்டுவிட்டு, தேவன் நமக்காக தயாரித்த வெற்றியில் நடக்க நம்மை தேவன் அழைக்கிறார். அதாவது இந்த வேதாகம திட்டம் கடந்த காலத்தைபற்றியது மட்டும் அல்ல, ஆனால் அவர் என்னையும் மீட்டெடுப்பார் என்னும் ஒரு நம்பிக்கையை பற்றியது. ஒவ்வொரு வறண்ட இடத்தையும், ஒவ்வொரு பயத்தையும், நம்மால் முடிக்க இயலாத கனவையும் மீண்டெடுக்க நேரம் ஒதுக்க முன் வருவோம். நாம் நம் இதயத்தில், நம்பிக்கை மற்றும் நோக்கத்தை உருவாக்க அவரது ஆவியை அழைக்கவும், அவரது திட்டங்களுக்கு முதல் உரிமை கொடுத்து புதுப்பிக்கப்பட்டு எழுந்திருக்கவும் தயாராகுவோம்.

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன் எசேக்கியேல் 37:5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

5 நாட்களில்

எரேமியா 29:11 ....அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இன்றைய தேவை - சமாதானத்துக்கான நினைவுகள்; நம்பிக்கை ; சொன்னபடி நிறைவேறும் வாக்குகள் – இவை நமக்கு சர்வலோகத்தை ஆட்சி செய்யும் தேவாதி தேவனின் சர்வவல்ல கரத்தால் மட்டுமே சம்பவமாக்கித் தரமுடியும். ஏன் இந்த வலி, வேதனைகள், நோய்கள், இழப்புகள்....காரணம் : சத்துரு -அவன் எப்படிப்பட்டவன்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான்:10:10) தீர்வும் இந்த 10 ஆம் வசனத்திலேயே இயேசு தருகிறார்: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். இயேசு யார்- இன்றைக்கு எனக்கு நன்மை செய்கிறவர்; பிசாசிடம் அகப்பட்ட என்னை குணப்படுத்துகிறவர். அப்போஸ்தலர் 10:38 நமது இன்றைய சமாதானத்துக்கேதுவான நினைவுகள்: பலவருடங்களாக நமக்கு பாரமாக இருந்த பாரம் திடீரென எடுபட்டு போகும்;இருதயத்தின் ஒரு மூலையில் நாம் முணுமுணுத்துக் கொண்டிருந்த விருப்பத்திற்கு பதில் –நாம் கற்பனை செய்தும் பார்த்திராத விதத்தில் கிடைக்கும்