ஏசாயா 40:12-14

ஏசாயா 40:12-14 பரிசுத்த பைபிள் (TAERV)

யார் கடல்களைக் கைப்பிடியால் அளந்தார்கள்? யார் வானத்தை கையளவால் அளந்தார்கள்? யார் பூமியில் உள்ள மண்ணைக் கிண்ணத்தால் அளந்தார்கள்? யார் அளவு கோல்களால் மலைகளையும் பாறைகளையும் அளந்தார்கள்? அது கர்த்தர்தான். கர்த்தருடைய ஆவியிடம் அவர் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. கர்த்தரிடம் அவர் எப்படிச் செய்யவேண்டும் என யாரும் கூறவில்லை. கர்த்தர் யாருடைய உதவியையாவது கேட்டாரா? கர்த்தருக்கு நேர்மையாக இருக்கும்படி யாராவது கற்பித்தார்களா? கர்த்தருக்கு அறிவை யாராவது கற்பித்தார்களா கர்த்தருக்கு ஞானத்தோடு இருக்குபடி யார் கற்பித்தது? இல்லை! கர்த்தர் இவற்றைப்பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கிறார்.