புதியது
தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
தேவனின் நோக்கத்தை முன்பாக வைத்து வாழ விரும்பும் நம் வாழ்வில் நமக்கு நம் நம்பிக்கையை சோதிக்கும், பயத்தை தூண்டி, குற்ற உணர்ச்சியாலும் வருத்தத்தாலும் நம்மைச் சுமையாக்கும் சவால்களை வாழ்க்கை அடிக்கடி கொண்டுவருகிறது. ஆனாலும், நம்முடைய விசுவாசம் என்பது தேவனின் நோக்கமும் கிருபையும் நமக்கு துணையாக நின்று ஜெயிப்பதற்கான பலத்தை நமக்கு அளிக்கிறது. சந்தேகங்களை எதிர்கொள்வதற்கும், அச்சங்களை வெல்வதற்கும், மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்கும், வருத்தத்தை அறிக்கை செய்வதற்கும் இந்த வேதாகமப் பாடங்களையும் நடைமுறைப் படிகளையும் ஆராய உங்களை அழைக்கிறது. தேவனின் வாக்குறுதிகளை நம்பி, அவருடைய கிருபையில் நம்பிக்கையுடன் நடக்க, தைரியமாக வாழ இந்தப் பிரதிபலிப்புகள் உங்களைத் தூண்டட்டும்.
முழுமையை நோக்கும் சபை
சபையாக கூடி வாழும் வாழ்வில் முழுமைப் பெற வாஞ்சிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது . கடவுள் இதை விரும்புகிறார். அவர் தம் ஊழியர்களை தெரிந்து, பயிற்றுவித்து சபையை முழுமையை நோக்கி பயணிக்க வைக்கிறார். இதன் வழியில் வரும் சங்கடங்கள் தெரிந்திருக்க வேண்டும். தார்ப்பரியங்களை தைரியமாய் கூறி, தேவைப் பட்டால் தழும்புகள் பெற்றும் இப்பாதையில் நம்மை நடத்தும் தலைவர்களையும் கொண்டிருக்க வேண்டும் . தரிசனங்களும் வெளிப்பாடுகளும் நமது பெலத்தையும், பெலவீனத்தையும் வெளிக்கொணற வேண்டும். களத்திருச்சபைகளை பெற்று அதன் மீது கரிசனை கொள்ளவேண்டும். அப்போதைக்கு அப்போது அத்து மீறி நடப்போரை கண்டித்துணர்த்தி கை கோர்த்து திருத்தி வாழ பிரயாசம் வேண்டும். முழுமையை பெற்றோம் என்றல்ல அடைவோம் என்ற நம்பிக்கையோடு தேவ அன்பிலும், கிறிஸ்துவின் கிருபையாலும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்திலும் வேரூன்றி முடிவுபரியந்தம் நிலைத்து வாழ்வோம். நித்தியம் நமது முழுமை. ஆமென்.