குணமாகுதல்
உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்
இந்தத் தலைப்பில் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இயேசு இந்த பூமியில் இருந்தபோது அவர் செய்த அருட்பணியின் பெரும்பகுதியானது சுகமாக்குதலாகத் தான் இருந்தது. இந்த வேதாகமப் பாடத்திட்டத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆழமான முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்படி சுகத்தை மாபெரும் பரம வைத்தியர் மட்டுமே கொடுக்க முடியும்
கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!
அகித்தோப்பேல் தாவீது ராஜாவின் ஒரு நம்பிக்கையான ஆலோசகராக இருந்தான். ஆனால், அவனுக்கு இருந்த கசப்புத் தன்மையால் அப்சலோமின் சதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து தாவீதுக்கு துரோகம் செய்தான். இறுதியில் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்டான். மனக்கசப்பு உன்னைக்கொல்ல விடாதபடி, அதன் காரணங்களையும், குணப்படுத்தும் முறையையும் இந்த ஐந்து நாட்கள் தியானப்பகுதியில் படித்து பயன் பெறுங்கள்.
தவறான முறையில் பயன்பாடு
எந்த மனிதனும் எப்போதும் தவறாக பயன்படுத்தப்பட தகுதி உடையவர் அல்ல. தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் அன்பு செய்யப்படவேண்டும் என்றும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார். எந்த தவறோ, குறையோ, மன வேற்றுமையோ ஒருவரின் சரீர, பாலியல், அல்லது உணர்ச்சிபூர்வமான ரீதியில் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு காரணமாக கூடாது. ஒவ்வொரு தனி நபரும் நீதி, அன்பு, மற்றும் ஆறுதல் பெற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்த இந்த 7-நாள் வாசிப்பு திட்டம் உதவுகிறது.