YouVersion Logo
Search Icon

ஒபதியா முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 586 இல் எருசலேம் அழிக்கப்பட்டபின் எழுதப்பட்டது. யூதாவையும் இஸ்ரயேலையும் எதிரிகள் தாக்கியபோது, ஏதோம் உதவிசெய்யாதபடியால் இறைவன் ஏதோமை நியாயந்தீர்ப்பதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. ஏதோம் ஏசாவின் சந்ததி. இஸ்ரயேலர் யாக்கோபின் சந்ததி. இவர்கள் இருவரும் ஆபிரகாமின் மகனான ஈசாக்கின் பிள்ளைகள். இவர்கள் சகோதரர்களாக இருந்தும் ஏதோம் உதவிக்குப் போகவில்லை. ஒரு சகோதரன் மற்ற சகோதரனுக்கு எதிராய் பாவம் செய்வதைப் பார்த்து இறைவன் நியாயந்தீர்ப்பார். இதுவே இப்புத்தகத்தில் காணப்படும் போதனை.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in