YouVersion Logo
Search Icon

சங்கீதம் 6

6
சங்கீதம் 6
கம்பியிசைக் கருவிகளுடன் செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க இசைக்குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்
1யெகோவாவே, உமது கோபத்தில் என்னைக் கண்டியாதேயும்;
உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டியாதேயும்;
2யெகோவாவே, நான் சோர்ந்துபோகிறேன், என்னில் இரக்கமாயிரும்;
யெகோவாவே, என் எலும்புகள் வேதனைக்குள்ளாகி இருக்கின்றன, என்னைக் குணமாக்கும்.
3என் ஆத்துமா துயரத்துக்குள்ளாகி இருக்கிறது.
எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, இது எவ்வளவு காலத்திற்கு?
4யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்;
உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என்னைக் காப்பாற்றும்.
5இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை.
பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்?
6நான் கலங்கியே இளைத்துப் போனேன்.
இரவு முழுவதும் என் அழுகையின் வெள்ளத்தால் நான் என் படுக்கையை நிரப்பி,
நான் அதைக் கண்ணீரால் நனைக்கிறேன்.
7என் கண்கள் துக்கத்தால் பெலவீனமடைகின்றன;
என் எல்லா பகைவரின் நிமித்தம் அவைகள் மங்குகின்றன.
8அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;
ஏனெனில் யெகோவா என் அழுகையைக் கேட்டிருக்கிறார்.
9இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்;
யெகோவா என் மன்றாட்டை ஏற்றுக்கொள்வார்.
10என்னுடைய எல்லா எதிரிகளும் வெட்கப்பட்டு மனச்சோர்வு அடைவார்கள்;
அவர்கள் பின்னிட்டுத் திரும்பி திடீரென வெட்கப்பட்டுப் போவார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீதம் 6