YouVersion Logo
Search Icon

சங்கீதம் 97

97
சங்கீதம் 97
1யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்;
தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும்.
2மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன;
நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார்.
3நெருப்பு அவருக்கு முன்சென்று,
சுற்றிலுமுள்ள அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.
4அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது;
பூமி அதைக்கண்டு நடுங்குகிறது.
5யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே
மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன.
6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது;
எல்லா நாடுகளும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
7உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும்,
விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்கள்;
தெய்வங்களே, நீங்களெல்லோரும் யெகோவாவையே வழிபடுங்கள்.
8யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால்
சீயோன் கேட்டுக் களிகூருகிறது;
யூதாவின் கிராமங்களும் மகிழ்கின்றன.
9யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்;
எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர்.
10யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்;
ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி,
கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார்.
11நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது,
இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது.
12நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள்,
அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீதம் 97