இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எரேமியா 17:9

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு
3 நாட்களில்
பரிசுத்த ஆவியின் மூலமாக நமது சாதாரண எண்ணங்கள் புதுவிதமான மாற்றங்களை பெறுகிறது. முதலாவதாக நம் இதயங்களை பாதுகாக்கிறது மேலும் நமது கனவுகள் மற்றும் தரிசனங்கள் தெய்வீக வழிகாட்டுதலை வெளிப்படுத்துகிறது. ஆவியானவருடன் இணைந்து செயல்பட நம்மை ஒப்படைப்பது மூலம், நம் இயல்பான உணர்வற்ற மனதின் வல்லமையை பயன்படுத்தி, தடைபட்டிருந்த ஆவிக்குரிய வளர்ச்சியை அடைய அதற்கு எதிரான வளர்ச்சித் தடைகளைத் தாண்டி, நம் வாழ்வில் தேவனின் மறுரூபப்படுத்தும் அனுபவங்களை அனுபவிக்க இயலும். இந்த ஆவிக்குரிய அனுபவங்கள் நம்மை நாமே ஆழமாகப் புரிந்துகொள்ளவும், தேவனின் நோக்கங்களை வெளிப்படுத்தவும், நம்பிக்கை, தெளிவு மற்றும் ஆன்மீக வெற்றியுடன் வாழும் உன்னத அதிகாரம் அளிக்கிறது.

ஜர்னலிங்
5 நாட்களில்
ஜர்னலிங் என்பது .உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள அவற்றை எழுதுவது ஆகும்.நாம் மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது பதட்டத்துடன் போராடினால், ஒரு ஜர்னல் அல்லது ஒரு குறிப்பேடு வைத்திருப்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும். பிலிப்பியர் 4:6-7 [6] நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். [7] அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.இது நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.