இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 4:2

இடைப்பட்ட நிலையில் தங்களை கண்டுகொண்ட 4 வேதாகம கதாபாத்திரங்கள்
4 நாட்களில்
கிறிஸ்துமஸ் முடிந்துவிட்ட நிலையில், நாம் ஒரு விசித்திரமான “இடைப்பட்ட” காலத்தில் இருக்கிறோம் - கிறிஸ்துமஸின் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டன, ஆனால் அன்றாட வாழ்க்கை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை. சில நேரங்களில், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையும் அப்படியே, ஒரு “இடைப்பட்ட” இடத்தில் சிக்கித் தவிப்பது போல் தோன்றுகிறது. இந்த நாட்களைப் பயன்படுத்துவதற்கு, வேதத்தில் “இடைப்பட்ட” நிலையில் இருந்த நான்கு நபர்களைப் பற்றி சிந்திப்பதைவிட வேறு என்ன சிறந்தது?

உண்மையாகவே என்னால் பாவ சோதனைகளை மேற்கொள்ள முடியுமா?
5 நாட்கள்
"நான் ஏன் அந்த பாவத்தோடு கூட போராடி கொண்டிருக்கிறேன்" என்று என்றைக்காவது உங்களை பார்த்து நீங்களே கேட்டிருக்கிறீர்களா? ரோமர் 7:15 -ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் பாருங்கள்: "நான் விரும்புகிறதை செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்". நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றத்தை தடை செய்யும் இந்த பாவங்களை நாம் செய்யாமல் இருப்பது எப்படி? பாவம் செய்யாத வாழ்க்கை உண்மையில் சாத்தியமா? இந்த தியான திட்டத்தில் பாவத்தை குறித்தும் சோதனைகளை குறித்தும், பிசாசை குறித்தும், மிக முக்கியமாக தேவனுடைய அன்பை குறித்தும் நாம் தியானித்து கற்றுக்கொள்ள இருக்கிறோம்.

புதையல் வேட்டை 1
5 நாட்கள்
வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் கண்டறிதல். டோக்கியோவில் உள்ள NewDayToDayவின் டாக்டர் Andy Meeko அசலாக எழுதிய உலகளாவிய குழந்தைகள்/இளைஞர் சீடத்துவ தொடரை அடிப்படையாக கொண்ட புதையல் வேட்டை முயற்சி.

லெந்து - காலங்களின் பிரதிபலிப்பு
13 நாட்கள்
தியாகம், மீட்பு மற்றும் தெய்வீக அன்பின் ஆழமான ரகசியங்களை ஆராய்வதன் மூலம், லெந்துக்காலங்கள் பற்றிய தொடரில் பரிசுத்தப் பயணத்தைத் தொடர்வோம். யோவா 15:13-ன் படி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” இயேசுவைப்போல பிறருக்காக உயிரைக் கொடுத்ததில் உண்மையான அன்பு காணப்படுகிறது. வனாந்தரத்தில் கிறிஸ்துவின் சோதனை நேரத்தை பிரதிபலிக்கும் இந்த அனுபவத்தை நாம் கவனிக்கும்போது நமது வாழ்க்கையிலும் துணிவு, தியாகம், பரிசுத்தம் இவற்றை எதிரொலிக்கும் பாடங்களைப் பற்றி அறிய முயல்வோம். இந்த ஆன்மீக தொடரில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.