இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 6:33

கொந்தளிப்பான நேரத்திலும் கூட நமது மனதின் சமநிலையைக் காத்துக் கொள்ளுதல்
3 நாட்கள்
நாம் ஒரு கொந்தளிப்பான காலத்தில் இருப்பதாக உணரும் போது மனநிலையை அமைதி நிலையில் காத்துக்கொள்வது சவாலானது என்பது விளங்கக் கூடிய கருத்துதான், ஆயினும் நிச்சயமாக இந்த ஒரு அமைதி நிலையை அடைந்து விடலாம். நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; சங்கீதம் 46:10a. ஒரு குழப்பமான மனதுக்கான ஒரே தீர்வு நம் நம்பிக்கை விசுவாசம் இவைகளில் அடங்கி இருக்கிறது.நம் மனதின் எண்ணங்களை அல்லது குழப்ப நிலைகளை தேவன் மேலேயே வைத்து, இந்தப் பாரச்சுமைகளை தேவனிடம் ஒப்படைத்து, அவருடைய மாறாத அன்பிலும், நம்மை விட்டு மாறாத அவருடைய பிரசன்னத்திலிருந்து வரும் தெய்வீக ஆறுதலையும் அமைதியையும் கண்டறிவதாகும்.

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்
4 நாட்கள்
கவலை என்பது அதன் எல்லா வடிவங்களிலும் நம்மை பலகீனமாக்கிவிடக் கூடியது. அது நம்மைத் தடுமாறச் செய்து பயத்திலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடக்கூடியது. ஆனாலும் இதுவே கதையின் முடிவு அல்ல. இயேசுவில் நாம் சுதந்தரத்தையும், கிருபையையும் பெற்றுக் கொண்டு போராட்டங்களை மேற்கொள்ள முடியும். நாம் அதை வெற்றி கொள்வது மட்டுமல்ல, அதன் மூலமாக இன்னும் சிறப்பானவர்களாக மாற முடியும்.

இனியும் பயத்தில் வாழவேண்டாம்
5 நாட்களில்
பயம் மற்றும் பதட்டத்தை கையாள்வது உனக்கு கடினமாக இருக்கலாம். பயத்தைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது மற்றும் உன் பயத்தை நீ எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி இங்கே விரிவாக காணலாம்.

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்
5 நாட்களில்
அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....

உங்கள் திருமண வாழ்க்கைக்குள் ஆத்மீய பேரார்வத்தை செலுத்துங்கள்.
7 நாட்கள்
கேரி தாமஸ் அவர்களின் புதிய புத்தகமாகிய "A Lifelong Love" லிருந்து எடுக்கப்பட்ட இவை திருமணத்தின் நித்திய நோக்கங்களைப் பற்றி பேசுகின்றன. மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உயிரை பரப்பும் ஒரு ஊக்கமூட்டும் உறவாக உங்கள் திருமண வாழ்வை அமைக்க நடைமுறை கலையை கற்றுக்கொள்ளுங்கள்.

ஒப்பீட்டிலிருந்து விடுபடுங்கள் அன்னா லைட்டின் 7 நாள் வாசிப்பு திட்டம்
7 நாட்கள்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை விட அபரிமிதமான ஒரு வாழ்வை ஆண்டவர் உங்களுக்கு தருகிறார் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் சோகமான உண்மை என்னவென்றால், ஒப்பீடு உங்களை அடுத்த நிலைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது. இந்த வாசிப்புத் திட்டத்தில், அன்னா லைட் வெளிப்படுத்துகிற ஆழ்ந்த அறிவு, ஒப்பிடுதல் உங்கள் செயல்திறன்களின் மீது இடுகின்ற தடைகளை உடைத்து, ஆண்டவர் உங்களுக்காக அமைத்திருக்கிற சுதந்திரமும் அபரிமிதமுமான வாழ்க்கையை வாழ உதவும்

பயணத்திற்கான மகிழ்ச்சி: சோதனையின் நடுவில் நம்பிக்கையைக் கண்டறிதல்
7 நாட்கள்
நாம் அதை எப்போதும் பார்க்கவோ உணரவோ முடியாது, ஆனால் தேவன் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்... நாம் கடினமான விஷயங்களைச் சந்திக்கும் போதும். இந்தத் திட்டத்தில், ஃபைண்டிங் ஹோப் ஒருங்கிணைப்பாளர் ஆமி லாரூ தனது சொந்த குடும்பத்தின் அடிமைத்தனத்துடன் போராடுவதைப் பற்றியும், தேவனின் மகிழ்ச்சி அவர்களின் இருண்ட காலங்களில் எவ்வாறு உடைந்தது என்பதைப் பற்றியும் இதயத்திலிருந்து எழுதுகிறார்.

குழந்தையாக இருக்காதீர்கள்! குழந்தையைப் போல இருங்கள். குழந்தைபோன்ற விசுவாசத்தை ஆராய 7 நாட்கள்.
7 நாட்களில்
மத்தேயு 18:3ல் (TAOVBSI) இயேசு, “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறுகிறார். அவர் சொன்னதன் அர்த்தம் என்னர்? அவர் எதைக் குறிப்பிடுகிறார்? இந்த ஒரு வார கால திட்டம், நாம் அடைய வேண்டிய 'சிறுபிள்ளைப் போன்ற விசுவாசத்தின்' ஏழு அம்சங்களை விவரிக்கிறது.

இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்
28 நாட்கள்
நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்
30 நாட்களில்
இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.