இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரோமர் 10:14

கட்டளை
3 நாட்கள்
“கட்டளை” என்ற இந்த வேதாகமத் திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இது, புறப்பட்டு போய், கிறிஸ்துவின் அன்பை எல்லோரும் அறியச் செய்ய அவருடைய சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்ட தெய்வீக கட்டளையைப் பற்றிய ஆய்வு. இந்த மூன்று- நாள் பயணத்தில், பிரதான கட்டளையை தேவனிடமிருந்து வந்த தனிப்பட்ட மற்றும்பொ துவான அழைப்பாகக் கொண்டு, அதைக் கைக்கொள்வதன் பெரும் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்வோம்.

நற்செய்தி: தேவனுடைய இரட்சிப்பின் திட்டம்
10 நாட்களில்
வருகின்ற 10 நாள் திட்டத்தில், தேவன் இந்த உலகத்தை எவ்வளவு மகிமையாய்ப் படைத்தார் என்பதையும், பாவத்தின் பிரவேசத்தினால் மனுக்குலம் அடைந்த அந்தகார நிலையையும் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். நாம் பாவிகளாயிருக்கையில் தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால், தமது தயையுள்ள சித்தத்தின்படி நமக்காக ஒரு மீட்பின் திட்டத்தை நியமித்தார். அந்தத் திட்டத்தை அவர் இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றி, நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு, இன்றும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம்மைப் பரிசுத்தமாக்கித் தமது கிருபையினால் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்தத் தியானத்தின் ஊடாக, கிறிஸ்துவுக்குள் நமக்குக் கிடைத்துள்ள புதிய அடையாளத்தையும், அவர் நமக்குக் கொடுத்துள்ள உன்னதமான பணியையும், நித்திய நம்பிக்கையையும் விரிவாகத் தியானிக்கப்போகிறோம்.