யெகோவா சொல்வது இதுவே:
“யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
அவர்கள் யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து,
அவரின் விதிமுறைகளைக் கைக்கொள்ளாமல் போனார்கள்.
ஏனெனில் அவர்களின் முன்னோர்கள் பின்பற்றிய
போலித் தெய்வங்கள் அவர்களை வழிவிலகப்பண்ணின.