என் மகனே, ஞானத்திற்கு உன் செவிசாய்த்து,
புரிந்துகொள்ளுதலில் உன் இருதயத்தைச் செலுத்தி,
நீ என் ஞானத்தை ஏற்றுக்கொண்டு,
என் கட்டளைகளை உன் உள்ளத்தில் சேர்த்துவை.
உண்மையில், நீ நுண்ணறிவுக்காக வேண்டுதல்செய்து,
புரிந்துகொள்ளுதலுக்காக மன்றாடி,
சுத்த வெள்ளியைத் தேடுவதுபோல் தேடி,
புதையலை ஆராய்வதுபோல அதை ஆராய்ந்தால்,
அப்பொழுது நீ யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து விளங்கிக்கொள்வாய்;
இறைவனைப்பற்றிய அறிவைக் கண்டுகொள்வாய்.