1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 49:15
பரிசுத்த பைபிள்
ஆனால் நான் சொல்கிறேன், “ஒரு பெண்ணால் தன் குழந்தையை மறக்கமுடியுமா? முடியாது! ஒரு பெண்ணால் தன் கர்ப்பத்திலிருந்து வந்த குழந்தையை மறக்கமுடியுமா? இல்லை! ஒரு பெண்ணால் தன் பிள்ளையை மறக்கமுடியாது! ஆனால் அவள் மறந்தாலும் நான் (கர்த்தர்) உன்னை மறக்கமுடியாது.
ஒப்பீடு
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 49:15 ஆராயுங்கள்
2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 49:16
பார், நான் உனது பெயரை என் உள்ளங்கையில் செதுக்கி இருக்கிறேன். நான் எப்பொழுதும் உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 49:16 ஆராயுங்கள்
3
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 49:25
ஆனால் கர்த்தர் கூறுகிறார், “கைதிகள் தப்பித்துக்கொள்வார்கள் எவனோ ஒருவன், பலமான வீரனிடமிருந்து கைதிகளை மீட்டுச் செல்வான். இது எவ்வாறு நடக்கும்? உன்னோடு போராடுபவர்களோடு போராடுவேன் நான் பிள்ளைகளைக் காப்பாற்றுவேன்.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 49:25 ஆராயுங்கள்
4
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 49:6
“நீ எனக்கு மிக முக்கியமான தாசன். யாக்கோபின் கோத்திரத்தை உயர்த்தி மீதியான இஸ்ரவேலை மீண்டும் நிலைநிறுத்துவாய். ஆனால், இந்த வேலை போதாது உனக்கு வேறு வேலை இருக்கிறது. அது இதைவிட மிகவும் முக்கியமானது. அனைத்து தேசங்களுக்காக நான் ஒரு ஒளியை ஏற்படுத்துவேன். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் காக்க நீ எனது வழியில் இருப்பாய்.”
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 49:6 ஆராயுங்கள்
5
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 49:13
வானங்களும் பூமியும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும். மலைகள் மகிழ்ச்சியோடு சத்தமிடட்டும். ஏனென்றால், கர்த்தர் தமது ஜனங்களை ஆறுதல் படுத்துகிறார். கர்த்தர் தமது ஏழை ஜனங்களிடம் நல்லவராக இருக்கிறார்.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 49:13 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்