1
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:6
பரிசுத்த பைபிள்
நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றுக்காகவும் தேவனிடம் பிரார்த்தனை செய்து கேளுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம் நன்றி செலுத்துங்கள்.
ஒப்பீடு
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:6 ஆராயுங்கள்
2
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:7
தேவனுடைய சமாதானம், உங்கள் இதயத்தையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கும். தேவன் தரும் சமாதானம் மிக உயர்ந்தது. நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:7 ஆராயுங்கள்
3
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:8
இப்போது சகோதர சகோதரிகளே! தொடர்ந்து உங்கள் மனதில் உண்மையும், பெருமையும், நீதியும், தூய்மையும், அன்பும், அழகும், மரியாதையும், உயர்வும் கொண்ட எல்லாவற்றையும் சிந்தித்துக்கொள்ளுங்கள்.
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:8 ஆராயுங்கள்
4
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:13
கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார்.
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:13 ஆராயுங்கள்
5
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:4
எப்பொழுதும் கர்த்தருக்குள் முழுமையான மகிழ்ச்சியோடு இருங்கள். நான் மீண்டும் கூறுகிறேன். முழு மகிழ்ச்சியோடு இருங்கள்.
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:4 ஆராயுங்கள்
6
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:19
இயேசு கிறிஸ்துவின் மகிமையால் நமது தேவன் மிக உயர்ந்த செல்வந்தராக இருக்கிறார். அவர் அச்செல்வத்தைப் பயன்படுத்தி உமக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பார்.
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:19 ஆராயுங்கள்
7
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:9
என்னிடமிருந்து நீங்கள் கற்றவற்றையும், பெற்றவற்றையும், கண்டவற்றையும், கேட்டவற்றையும் மட்டும் நீங்கள் செய்யுங்கள். சமாதானம் கொடுக்கிற தேவன் உங்களோடிருப்பார்.
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:9 ஆராயுங்கள்
8
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:5
நீங்கள் சாந்தமும் கருணையும் கொண்டவர்கள் என்பதை மக்கள் எல்லாரும் தெரிந்துகொள்ளட்டும். கர்த்தர் விரைவில் வருவார்.
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:5 ஆராயுங்கள்
9
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:12
ஏழ்மையில் இருக்கும்போது எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். செல்வம் இருக்கும்போதும் எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். அந்த இரகசியத்தை நான் கற்றிருக்கிறேன். எனக்கு உண்ணுவதற்கு இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். எனக்கு தேவையானவை அனைத்தும் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, மகிழ்ச்சியுடன் நான் இருக்கக் கற்றிருக்கிறேன்.
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:12 ஆராயுங்கள்
10
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:11
எனக்குத் தேவைகள் உள்ளன என்பதற்காக இவற்றையெல்லாம் நான் உங்களுக்குக் கூறவில்லை. எனக்கு இருக்கிற சூழ்நிலையில் நான் திருப்தி அடைந்த உணர்வில் இருக்கிறேன்.
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:11 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்